Wednesday, July 3, 2019

ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய காமாட்சி சிந்தாமணி

ஸ்ரீ காமாட்சி சிந்தாமணி

பொன்மின்னு மேனியில் பொலிவுற்ற நகைபல

பொருந்த நீ வந்து நின்றாய்

அன்பற்று உன்னடி அண்டினோர் அகத்தில்

அருகினில் அமர வந்தாய்

இன்புற்று வாழ்ந்திட இனியநற் சுகங்களை

இன்று நீ இங்கு தந்தாய்

உன்பற்று கொண்டவர் உண்மையாய் உயர்ந்திட

உடனோடி யோடி வந்தாய்

கன்னலின் மொழியாளே களிதந்த விழியாளே

கற்பகச் சோலை கிளியே

கடலாடு சென்னையில் கவிபாடி நின்றிடும் கருணை காமாட்சி தாயே