ஸ்ரீ காமாட்சி சிந்தாமணி
பொன்மின்னு மேனியில் பொலிவுற்ற நகைபல
பொருந்த நீ வந்து நின்றாய்
அன்பற்று உன்னடி அண்டினோர் அகத்தில்
அருகினில் அமர வந்தாய்
இன்புற்று வாழ்ந்திட இனியநற் சுகங்களை
இன்று நீ இங்கு தந்தாய்
உன்பற்று கொண்டவர் உண்மையாய் உயர்ந்திட
உடனோடி யோடி வந்தாய்
கன்னலின் மொழியாளே களிதந்த விழியாளே
கற்பகச் சோலை கிளியே
கடலாடு சென்னையில் கவிபாடி நின்றிடும் கருணை காமாட்சி தாயே
Wednesday, July 3, 2019
Subscribe to:
Posts (Atom)